Friday, March 14, 2008

இதனால் சகலமானவர்களுக்கும்...


வலைப்பூ..

பூ. இவ்வளவுதானா.. இந்த ஸ்ரீ, ப்ரியா, கார்த்திக் (மூவருக்கும் நன்றிகள்) இவங்களெல்லாம் வலைப்பூவா பூத்து தள்ரப்போ நாமளும் ஏன் "பூக்க" கூடாதுன்னு யோசிச்சதா...

இல்ல மத்தியானம் மூணு மணிக்கு தூக்கம் வராம என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்க ஆரம்பிச்சதா.. (அய்யய்யோ, உனக்கு தூக்கத்துல "எழுதுற" வியாதி இருக்கான்னு என் மனைவி கத்தறா)

மனசில இருக்கறத எழுதி அத படிச்சு சிரிக்கறப்போ மறை கழடரதுக்கு பதிலா இறுகிக்கும் - னு எங்கேயோ வறுகடலை போட்டு தந்த பேப்பர்ல போட்டிருந்தது நினைவுக்கு வந்து தொலைஞ்சதுனாலையா...

ஹூம், சுஜாதா இருந்தாலாவது படிச்சுட்டு பெரிய மனசு பண்ணி ஏதாவது ஒரு "கற்றதும் பெற்றதும்"ல ஒரு ஓரமா போட்டிருப்பாரு... (நெனப்பு தான்)

இப்படி, காரணம் இல்லாமல் அல்லது இன்னதென்று தெரியாமல் தான் சாலையோரம் பூத்து தொலைந்தது இந்த வலைப்பூ..

போகட்டும், சாலையில் பயணம் செய்பவர்களில், தப்பித்தவறி மகரந்தம் நாடி இதற்குள் வருவோர்க்கும் அவ்வப்பொழுது கிடைக்கலாம் சில தற்செயல் துகள்கள்...


இன்னும் இன்னும்...







4 comments:

alone in d crowds said...

vanakkam
Varuga...
valarga...

Me said...

:-) :-)

Makizhchi....

Enna thamizhla ezhutha vidha maataenguthu :-(

சிவசுப்பிரமணியன் said...

Lenin sir... kalakkal aarampam

ஊர்சுத்தி... said...

solvettu...

thamizhin padikkattaai irukkattum...

vaazhththukkal thozha...

-saravanan